முன்னாள் சர்வதேச நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கான் பற்றிய தவறான செய்திகள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் கூறுகையில், இன்றும் இந்தச் செய்தி பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது. இதை மாற்றுவதற்கு அவரது வழக்கறிஞர்கள் உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும். நீதிபதிகள் விசாரித்து விரைவாகத் தீர்ப்பு வெளிவந்தால் இந்த அவப்பெயர் ஒழியும் என்கின்றனர்.
இந்த வாரம் பிரான்ஸின் பிரபல நாளிதழான லிபரேஷன் ஸ்டிராஸ்கானைப் பற்றிய தகவல்கள் தொலைபேசிக் குறுந்தகவல்கள் மூலம் கசிந்ததாக தெரிவித்துள்ளன. இவர் பேப்ரிஸ் பங்கோவ்ஸகி என்ற தரகருக்கு அனுப்பிய தகவல்களைப் இந்தப் பத்திரிக்கை வெளியிட்டது.
ஸ்டிராஸ்கானின் வழக்கறிஞர்கள் இதுகுறித்து கூறுகையில், இந்தக் குறுந்தகவல்கள் அனைத்தும் விசாரணை தொடர்பான பாலியல் வியாபாரத் தகவல்கள், ஸ்டிராஸ் தொடர்பானவை அல்ல ஸ்டிராஸ்கான் நீதிமன்ற விசாரணையின் போது தன் பக்கத்து நியாயங்களை எடுத்துரைக்க முடியும் என்று பத்திரிகையாளரிடம் தெரிவித்தனர்.




0 comments:
Post a Comment